அலர் வெளியீடு பற்றி

உலக உயிர்கள் ஏனையத்தினின்றும் மனித இனம் எவ்விதத்திலும் உயர்ந்ததில்லை என்பது உண்மையிலும் உண்மை. எனினும் இந்த வாழ்வை ஆழ்மனதைக் கொண்டு ரசித்து ஆறறிவால் ஆராய்ந்து நல்லது கெட்டதை பகுத்தறியும் பண்பு மனிதர்களை தனித்துவமான ஓர் இனமாய் மாற்றிவிடுகிறது. அத்தகைய மனித இனம் மாண்புற வாழ வாசிப்பு மிக முக்கியம் என்பதை உணர்ந்து உருவாக்கப்பட்ட பதிப்பகம் தான், அலர் வெளியீடு.

எங்களது நோக்கம், வாசிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு செறிவான நூல்களை பெரும்பான்மை மக்களின் பயன்பாட்டுக்காய் குறைந்த விலையில் பதிப்பித்து கொடுப்பதே. இதை வியாபார நோக்கத்தை மட்டும் மையமாக கொண்டு செய்யாமல், தனது பொறுப்பாக உணர்ந்து செயல்படுவது தான் அலர் வெளியீட்டின் சிறப்பு என்று தெரியப்படுத்துவதில் பெருமகிழ்வு கொள்கிறது, அலர்.

புத்தகங்கள்

ஆல்பர்ட் எனும் கலைக்களஞ்சியம்

ஆல்பர்ட் எனும் கலைக்களஞ்சியம்

எஸ். அற்புதராஜ்

(5.0 / 5)

399

இந்த புத்தகம், "ஆல்பர்ட் எனும் கலைக்களஞ்சியம்", திரு. ஆல்பர்ட்டின் கலை மற்றும் இலக்கிய உலகிற்கான ஆழமான பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பாகும்.

சத்யஜித் ரே கதைகள்

சத்யஜித் ரே கதைகள்

சத்யஜித் ரே

(5.0 / 5)

399

சத்யஜித் ரே எழுதிய சுவாரஸ்யமான சிறுகதைகளின் தொகுப்பு. தமிழில் எஸ். அற்புதராஜ் அவர்கள் அழகாக மொழிபெயர்த்துள்ளார்.

சகாயம் செய்த சகாயம்

சகாயம் செய்த சகாயம்

பெருமாள்முருகன்

(5.0 / 5)

150

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உ. சகாயம் பணியாற்றியபோது, தனது அலுவலகத்தில் ‘லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’ என்று ஒரு பலகையை மாட்டிவைத்தார். விளிம்புநிலை மக்களின் துயரங்களைத் துடைத்தெறிந்த சகாயத்தின் பணிகளைப் பதிவுசெய்கிறது.

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

அமுதன் அடிகள்

(5.0 / 5)

200

நினைவும் உணர்வும் சார்ந்த அமுதன் அடிகள் அவர்களின் இலக்கியப் படைப்பு. ஆன்மிகம் மற்றும் மனித உறவுகள் பற்றிய ஆழமான பார்வை.

விரைவில்

எங்கள் வரவிருக்கும் வெளியீடுகளைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தைப் பெறுங்கள்...

லங்கேஷ் கதைகள்
விரைவில் வருகிறது

லங்கேஷ் கதைகள்

பி. லங்கேஷ்

புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் பி. லங்கேஷ் அவர்களின் சிறுகதைகள்...

அதிக எதிர்பார்ப்பு